Posts

Showing posts from September, 2025

இலக்கியமரபு

Image
இலக்கியமரபு இ லக்கிய மென்னுமிச்சொற்‌ பழந்‌தமிழ்ச் சொல்லன்று; பிற்றைஞான்றை வடசொற்‌ சிதைவு; இலக்கணமிலக்கியம்‌ என்னும்‌ இணைச்‌சொல்லுளொன்று. இலக்கணமென்பதூஉம்‌ வடசொற்சிதைவு. இச்சொல்லுத்‌ தொல்‌காப்பியத்துள்ளுங்‌ காணப்படுகின்றது. ஆயினும்‌ அதனுள்‌ இலக்கியமென்பது காணப்படவில்லை. இலக்கணமென்பது தானும்‌ இலக்கணவிலக்கியமென்னும்‌ எண்ணுத்தொடரில்வரும்‌ பொருண்மேல்‌ வரவில்லை. அதுவும்‌ இடைக்காலத்துப்புக்க இடைச்செருகலாகவேயிருக்க வேண்‌டும்‌. அது அவ்விடங்கட்குப்‌ பொருத்தமின்றி வேண்டாதிருப்பவும்‌ அவ்விடங்களில்‌ உள்ள பழந்தமிழ்ச்சொற்‌ காணப்படாமையால்‌ வடநூற்பயிற்சி யுடையவராய்த்‌ தமிழ்நூலாய்ந்தார்‌ தமக்குத்‌ தோன்றியவாறு வலிந்து முடைந்துள்ள தென்பதனைத்‌ தமிழ்நூற்‌ பயிற்‌சிவல்லார்‌ எளிதிற்‌ கண்டுகொள்வர்‌. இதுபோலும்‌ இடைச்‌ செருகல்‌பல தொல்காப்பியத்துள்‌ ஆங்காங்குக்‌ காணப்படும்‌. திருவள்ளுவருடையமுப்பால்‌ போலும்வரம்புடையமிகச்சிலவே இடைச் செருகற்குப் ‌பெரிது மரியனவாம்‌. அவையொழியப்‌ பல்லாயிரம்‌ யாண்டுகளாகவும்‌ பன்னூறியாண்டுகளாகவும்‌ வழங்கிவருமெந்நாலும்‌ பதிப்புமுறைவருமுன்‌ இடைச்செருகவில்லாதிருந்ததில்லை. வடமொழிக்‌ கல்வியும்...

நாடக மரபு.

Image
நாடக மரபு. தொன்று தொட்டே நாடகக்கலையைத்‌ தமிழகத்தார்‌ பொன்‌னெனப்‌ போற்றினர்‌; பேணிக்காத்தனர்‌. தமிழ்மொழி இயல்‌, இசை நாடகமென முத்திறப்படுத்தி வளர்க்கப்பட்டமையே இதனைத்‌ தெட்‌டத்தெளிவாகக்‌ காட்டுகின்றது. நம்‌ செந்தமிழ்மொழி, உலகமொழிகள்‌ அனைத்திலும்‌ பார்க்கத்‌ தனித்துவமும்‌ மகத்துவமும் கொண்டமொழியாக இலங்குவதும்‌ இக்காரணத்தால்‌ என்பது கண்கூடு, இம்‌ முத்தமிழில்‌ ஒன்றாகிய இயலும்‌ இசையும்‌ விரவிய நாடகத்தமிழ்‌, சங்ககாலத்திலேயே தன்னிகரற்ற சிறப்புடன்‌ பூரணத்துவம் பெற்று விளங்‌கியதெனலாம்‌. “ நாடக வழக்கினும்‌ உலகியல்‌ வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கம்.” அகத்திணை 53 என்ற தொல்காப்பியத்திலுள்ள அடிகள்‌ இவ்வுண்மையைப்‌ புலப்‌படுத்தி நிற்கின்றன. அக்காலத்திலே தமிழ்மக்கள்‌ கூட்டங்கூட்டமாகக்‌ கூடி நாடகங்களை வெண்ணிலவிலே இன்பமாக நயந்தனர்‌ என்ற கருத்தைப்‌ பட்டினப்பாலையில்‌ உள்ள “ பாடல்‌ ஓர்த்தும்‌ நாடகம்‌ நயந்தும் ‌ வெண்ணிலவின்‌ பயன்‌ துய்த்தும் ‌ கண்‌அடைஇய கடைக்கங்குல்‌” என்ற அடிகள்‌ மிக அழகாகவிவரிக்கின்றன. இற்றைக்கு இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌ வதிந்த வள்ளுவப்‌ பெருந்தகையே, சில குறள்களில்‌ கூத்...

இசுலாமுந்‌ தமிழும்

Image
இசுலாமுந்‌ தமிழும் ‌ “யா தும் ஊரே யாவருங்‌ கேளிர்” என்ற சான்றோர்‌ கூற்றுக்‌கிணங்கப்‌ பல்வேறு நாடுகளில்‌ வாழ்ந்து வெவ்வேறு சமயங்களைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ பல்வேறு இனமக்கள்‌ தமிழ்‌ மொழியைப்‌ பேணிவளர்த்து வந்துள்ளனர்‌. உலகத்திலுள்ள பிரதான சமயங்கள்‌ அத்‌தனையும்‌ பற்றிய இலக்கிய நூல்களுள்ள மொழிகள்‌ சிலவற்றிலே தமிழ்மொழியும்‌ ஒன்றாகும்‌. சைவ, வைணவ, பெளத்த, சமண, கிறித்தவ, இசுலாமிய சமயங்களைப்‌ பின்பற்றும்‌ அனைவரும்‌ தத்தமது மொழியாக உரிமை பாராட்டத்தக்க தனிப்பெரும்‌ பண்புகள்‌ தமிழுக்கு உண்டெனில்‌ அக்கூற்று மிகையாகாது. இங்ஙனம்‌ வெவ்வேறு சமூகத்தவருந்‌ தத்தமது என உரிமை பாராட்டுந்‌ தமிழ்மொழி, அவ்‌வச்சமூகத்தவரிடையே நிலவும்‌ பழக்க வழக்கங்களுக்கும்‌ விருப்புவெறுப்புக்களுக்கும்‌ இயைய அதனது நடையில்‌ வேறுபட்டுள்ளது. தமிழ்மொழியைப்‌ பேசும்மக்களின்‌ ஒன்றோடொன்று வேறுபட்ட சமயஒழுக்க ஆசாரங்களுக்கு அமைய அதன்‌ வளம்‌ ஓங்கியதோடு அதன்‌ அமைப்பிலும்‌ மாற்றங்கள்‌ உண்டாயின. ஆனால்‌ எத்தகைய மாற்‌றங்கள்‌ உண்டான பொழுதிலும்‌ அவை அனைத்துங்‌ கன்னித்‌ தமிழின்‌ இலக்கணமரபு வழுவாத முறையில்‌ இடம்பெற்றுள்ளன. இனி, இசுலாத்தினுடைய தொடர்பின...

இலக்கியமுஞ்‌ சமூக வாழ்வும்

Image
இலக்கியமுஞ்‌ சமூக வாழ்வும் “முடிபுனை கடிகை'' வரப்போகின்றது. முடிசூட்டுக்‌குரிய மங்கல நிகழ்ச்சிகள்‌ நடைபெற்‌றுக் கொண்டிருக்கின்றன. கலைமகளை மணந்த காகுத்தன்‌, திருமகளை மணந்தவில்லின்  செல்வன், நிலமகளையும் மணக்கப்போகின்றான்‌. மூவுலகுக்கும்‌ பொதுவான முடிசூட்டு விழா. நீ, நான்‌ என்று சொல்லிக்கொண்டு முடிமன்னரும்‌, மண்டலாதிபதிகளும்‌, பட்டவர்த்தனரும்‌ முதலிய பிரபலவான்கள்‌ விரைந்து புறப்பட்டுச் ‌செல்கின்றார்கள்‌. சனசமுத்திரம்போன்று பொதுமக்கள் ‌மகிழ்ச்சியொலியுடன்‌ திரண்டு வருகின்றார்கள்‌. இத்தனையும் ‌எதற்கு? தசரதன்‌ வாயாலேயே ௯றிவிட்ட முடிபுனை கடிகைக்கு. “நடையில்‌ நின்றுயர்‌ நாயகன்‌” முடி சூடுவதை நானிலம்‌ முழுதுமே நயந்துநிற்கின்றது. “மாதர்கள்‌ கற்பின்‌ மிக்கார்‌ கோசலை மனத்தை யொத்தார் வேதியர்‌ வசிட்ட னொத்தார்‌ வேறுள மகளி ரெல்லாம் சீதையை யொத்தார்‌ அன்னாள்‌ திருவினை யொத்தான் ‌அவ்வூர்ச் சாதுகை மாந்த ரெல்லாம்‌ தசரதன்‌ தன்னை யொத்தார்‌.” சமபுத்தி படைத்த இராமபிரானின்‌ முடிசூட்டுவிழா எல்லார்க்‌ குஞ்‌ சமமான மனமகிழ்ச்சியை யளிப்பது இயல்புதானே. இதில்‌ வியப்பென்ன? அரதன விளக்கங்களால்‌ அலங்கரிக்கப்பெற்று அவ...